இளைஞர்களே ரெடியா.. திருச்சியில் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பளிக்கும் வகையில் மாதம்தோறும் 2 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

அதன்படி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி உள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். 

மேலும் வயது வரம்பாக 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் சுய விவரக்குறிப்பு, கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

August 12 Mega employment camp in Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->