சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு! வெடிபொருள் விற்பனைக்கு அதிரடித் தடை...! - தூத்துக்குடி கலெக்டர்
Assembly election security Ban sale explosives Thoothukudi Collector
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான விஜூ மகாஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவும், மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது அமைதியும் சட்டம்-ஒழுங்கும் குலையாத வகையில், 1884-ம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து கடைகள் மற்றும் கிடங்குகளை தற்காலிகமாக மூட தமிழக அரசு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.03.2026) என்ற ஆணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுகின்றது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உரிமம் பெற்ற வெடிபொருள் விற்பனை நிலையங்களும் கிடங்குகளும், வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் 24, 2026 வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4, 2026 வரை என மொத்தம் 7 நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் அமைதியை உறுதி செய்யும் நோக்கில் இந்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Assembly election security Ban sale explosives Thoothukudi Collector