சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மே 16ம் தேதி பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது. அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது.

அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். அமிர்த ஜோதி ஐஏஎஸ் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இணைச் செயலாளராக மணியாச்சி வந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக  பணியாற்றி வந்த அமிர்த ஜோதி தற்பொழுது அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aruna IAS appointed as chennai district collector


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->