குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த அக்கா, தம்பிக்கு அரங்கேறிய சோகம்.. செந்துறையில் பரிதாபம்.!!
Ariyalur Sendurai bother and sister died in pool
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பொன்குடிகாடு கிராமத்தை சார்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 10 வயதுடைய பிருந்தா என்ற மகளும், 8 வயதுடைய கிரிதரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் நிலையில், நேற்று மாலை நேரத்தில் அக்கா மற்றும் தம்பி இருவரும் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், வெயில் வெப்பம் காரணமாக பிருந்தா தனது தம்பியை அழைத்துக்கொண்டு அங்குள்ள குளக்கரையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். இதில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சிறுவன் கிரிதரன் எதிர்பாராத விதமாக சென்று தண்ணீரில் மூழ்கவே, தம்பியை காப்பாற்றும் பொருட்டு அக்காவும் நீருக்குள் சென்று பரிதாபமாக இருவரும் தத்தளித்துள்ளனர்..
நீரில் இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க, அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கூச்சலிட்டுள்ளர். திறந்துவந்த மக்கள் இருவரையும் காப்பாற்றி, பொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கவே, அங்கு மருத்துவர்கள் இல்லை என்பதால் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur Sendurai bother and sister died in pool