8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. மிட்டாய் வாங்கி தருவதாக கூறி காமுகன் கொடூரம்.!
Ariyalur Jayankondam 8 Aged Child Girl Sexual Abused by Coli Worker David Ails Sentamil Selvan
8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தா. பழூர் பிள்ளையார்குளம் காலனி பகுதியை சார்ந்தவன் டேவிட் என்ற செந்தமிழ்செல்வன். இவன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். இவனது வீட்டருகே 8 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கூலித்தொழிலாளி டேவிட் சம்பவத்தன்று சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பிறப்புறுப்பின் வலியால் துடித்து அழுதுகொண்டே பெற்றோரிடம் வந்து விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபா, செந்தமிழ்செல்வனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ariyalur Jayankondam 8 Aged Child Girl Sexual Abused by Coli Worker David Ails Sentamil Selvan