விசிகவினரின் அராஜகம்! சாதி கலவரத்துக்கு திட்டமா? நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?!
Ariyalur District VCK Illegal Poster in NH Name board issue
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கல்லாத்தூர் - பாப்பாக்குடி நெடுஞ்சாலையில், தண்டலை ஊராட்சி சேவை மையம் அருகே, நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை மறைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டர் அடித்து ஒட்டி அராஜக செயலலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அடங்கமறு, அத்துமீறு என்ற கொள்கை பிடிப்போடு களமிறங்கியுள்ள விசிகவினர், பிரச்சினையை தூண்டும் வகையில் நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையை மறைத்து பேனர் ஒட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அராஜக செயலை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளோ அல்லது கிராம மக்களோ தட்டிக் கேட்டால், வன்முறையைத் தூண்டலாம், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம், சாதிய மோதலை உண்டாக்கி அரசியல் ஆதாயம் அடையாளம் என்கிற நோக்கில் விசிகவினர் திட்டமிட்டு இறங்கியுள்ளதாக அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், விசிகவினரின் இந்த அத்துமீறலை ஆரம்பத்திலேயே தடுத்து, பிரச்சினை ஏதும் நிகழாமல் தடுத்திடவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அரியலூர் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Ariyalur District VCK Illegal Poster in NH Name board issue