சென்னையின் வரும் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்; மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
Areas in Chennai that will experience power outages on Saturday
சென்னையில் நாளை மறுநாள் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''சென்னையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை - 04.07.2026) காலை 09:00 மணி முதல் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீகிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட்.
குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டாசியோவா தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். குன்றத்தூர்: சிறுகளத்தூர், கெளித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார்நகர், அஞ்சுகம்நகர், மலையம்பாக்கம்.
பஜார் தெரு, மேத்தாநகர், ஜி ஸ்கொயர், மணிகண்ட நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்'' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Areas in Chennai that will experience power outages on Saturday