#தமிழகம் || அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டு கொடூர விபத்து.! ஓட்டுநர் உடல்நசுங்கி பலி.! - Seithipunal
Seithipunal


அறந்தாங்கி அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டு கொடூர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த குன்னக்குரும்பி பகுதியில் தமிழக அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 16 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தும், அறந்தாங்கி நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ஆலங்குடி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த 16 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தா விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aranthanki bus lorry accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->