வரும் 13ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட பட்டு துணிகள் கொண்டு கொடிமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. 

18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

apr 13 leave for thanjavur district


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->