கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் ஆத்திரம்.. பள்ளி மாணவனை மது பாட்டிலால் குத்திய இளைஞர்!
Anger due to being caught in a drug case Youth who stabbed a school boy with a liquor bottle
கஞ்சா வழக்கில் சிக்க வைத்த பள்ளி மாணவனை இளைஞர் ஒருவர் மது பாட்டிலை உடைத்து குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்த 19 வயதான சிவசூரியா அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவன் சிவசூரியா குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கஞ்சா விற்பனை செய்துவந்த சிவசூரியாவை போலீசார் கைது செய்தனர். இதனால், மாணவனுக்கும், சிவசூரியாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி மாணவன் இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சிவசூரியா மற்றும் அவரது நண்பர் லிபின் ஆகியோர் மாணவனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சிவசூரியா கீழே கிடந்த மது பாட்டிலை உடைத்து மாணவனை குத்தி விட்டு நண்பருடன் தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசூரியாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லிபினை தேடி வருகின்றனர்.
English Summary
Anger due to being caught in a drug case Youth who stabbed a school boy with a liquor bottle