தடை செய்யப்பட்ட வழியில் மீன் பிடித்த முதியவர்.. எதிர்பாரத விதமாக உயிரிழந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


வெடி வீசி மீன் பிடிக்க முயன்று பலியான முதியவரின் சடலத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம்,  சார்ணாபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள காவேரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். வலைகளில் மீன் சிக்காததால் அவர் தோட்டா வெடியை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

வலைகளில் மீன் சிக்காத போது தோட்டா வெடியை வீசினால் மீன்கள் மேலே வரும் அப்போது அதனை வலை வீசி அதனை பிடிப்பர். இந்த முறை தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தோட்ட வெடியை லெட்சுமணன் வீசும் போது எதிர்பாராத விதமாக அவரின் கைகளிலேயே குண்டு வெடித்தது  கை சிதறி அவர்  ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லட்சுமணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An explosion while fishing kills an elderly man


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->