ஆம்னி பேருந்துகளை சென்னைக்குள் இயக்க வேண்டும் - உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளம்பாக்கத்தில் பிரமாண்ட அளவில் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து முனையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளை சென்னைக்குள் இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கைவிடப்பட்டுள்ளது. அதாவது, பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amni bus owners association request amni bus run in kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->