மயிலாடுதுறை || தாறுமாறாக ஓடிய ஆம்னி பேருந்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு மன்னார்குடி லட்சுமாங்குடிக்கு சென்று கொண்டிருந்தது. 

இந்தப் பேருந்து இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள கதிராமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது குறுகிய இடத்தில் வைக்கப்பட்ட சென்டர் மீடியனை ஓட்டுநரால் கவனிக்க முடியாததால், அதன் மீது மோதி சாலையில் ஒருபக்கமாக சாய்ந்தது. 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறித் துடித்தனர். பயணிகளுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில், பேருந்தை ஒட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த இம்தியாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். 

இதைப் பார்த்த அந்த வழியே சென்ற பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு, படுகாயமடைந்த ஓட்டுநர் இம்தியாஸை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன் கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amni bus accident in near vaitheeswaran temple


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->