#Breaking: வாகனம் பறிமுதல் எதிர்ப்பு.. தற்கொலை முயற்சி.. ஆம்பூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமலாகியுள்ள தளர்வுடன் கூடிய ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த விதமான தளர்வுகளும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மருத்துவம் மற்றும் அவசர காரணங்களை தவிர்த்து வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சார்ந்தவர் முகிலன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏ.ஆர் திரையரங்கம் அருகே சென்று கொண்டு இருந்த நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தான் அவசரமாக செல்கிறேன் என்று முகிலன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த நிலையில், வாகனம் இல்லாமல் வீட்டிற்கு சென்ற முகிலன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து, தனது வாகனத்தை பறிமுதல் செய்த இடத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனால் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் முகிலனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.    

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambur Youngster suicide attempt due to Confiscation of the vehicle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->