திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
AIADMK protest against the DMK government Edappadi Palaniswamis announcement
கும்பகோணம்,மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறியதற்கும், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகத்தை வேடிக்கை பார்ப்பதற்கும், திமுக அரசை கண்டித்தும், அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"2021-ஆம் ஆண்டு அவசரமாக கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்ததற்குப் பிறகு, அரசு எந்த அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. மக்களிடம் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப சேவைகள் இல்லை."
சாலைகள் குழிகள் மிக்க நிலையில்,குப்பைகள் அகற்றப்படாமல்,குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை,அம்மா உணவகங்களுக்கு போதிய நிதி இல்லை,சாக்கடை பராமரிப்பில் மோசடி,கொசுத்தொல்லைஅதிகரிப்பு,பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு,மாநகராட்சி பள்ளிகள் சிதிலம்,கல்வி நிதி முறையாக செலவிடப்படவில்லை,
கும்பகோணம்,மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறியதற்கும், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகத்தை வேடிக்கை பார்ப்பதற்கும், திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், காந்தி பார்க் அருகில் 04.07.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி
கலந்துகொள்வோர்: கழக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்."மாநகராட்சியின் செயலற்ற நிர்வாகத்தையும், திமுக அரசின் மீள்பார்வையற்ற ஆட்சியையும் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது," என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
English Summary
AIADMK protest against the DMK government Edappadi Palaniswamis announcement