#BigBreaking | அடுத்த அதிரடியில் இறங்கிய ஓபிஎஸ்! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று, தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பொது ச் செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்று ஓ பன்னீர்செல்வம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியதை சுட்டிக்காட்டி உள்ள (இந்த தீர்ப்பு பொதுக்குழு செல்லுமா செல்லதா என்பதற்கு மட்டுமே. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உரிமையியல் நீதிமன்றத்தின் நாடி தீர்வு பெற்றுக் கொள்ளலாம்) ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பு : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK OPS letter to EC EPS march 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->