ஒளிவட்டத்தை நான் பார்த்துவிட்டேன்.. நாமதான்.. ஒ.பன்னீர் செல்வம் உச்சகட்ட மகிழ்ச்சி.!
AIADMK OPanneerSelvam Election Campaign at Ranipet Speech 2 Oct 2021
அதிமுகவின் வெற்றியை தடுக்கும் சக்திகள் தமிழகத்தில் இல்லை என ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் விடுபட்ட ஊரக தேர்தல்கள் அக்டோபர் 6 & 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஒ. பன்னீர் செல்வம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், " அதிமுக வேட்பாளர்களின் முகத்தில் வெற்றி புன்னகையானது எனக்கு தெரிகிறது. வேட்பாளர்களின் முகங்களில் உள்ள வெற்றிப்புன்னகை அதிமுக 100 விழுக்காடுக்கு 100 விழுக்காடு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் வெற்றியை தடுக்கும் சக்திகள் தமிழகத்தில் இல்லை " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
AIADMK OPanneerSelvam Election Campaign at Ranipet Speech 2 Oct 2021