விபத்துகளை யாராலும் தடுக்க முடியாதா? அமித் ஷாவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதியது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மருத்துவமனையில் சிகிச்சைபெறும் உயிர் தப்பிய ஒருவரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், “விபத்துகளை யாராலும் தடுக்க முடியாது” என்ற அவரது பேச்சு, அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததாகவும், தீவிபத்தால் மீட்பு சாத்தியமில்லை என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதாகவும், அமித் ஷா தெரிவித்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் இந்த கருத்து உணர்வுப்பூர்வமற்றது என காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும், குறைந்தபட்சமாக பொறுப்புக்கூறலாவது எதிர்பார்க்கப்படுகிறது. ‘தடுக்க முடியாது’ என்பது ஒருவகை கட்டுப்பாடுகளுக்கான தோல்வியை ஒப்புக்கொள்வது போல. விபத்துகள் கடவுளின் செயல் அல்ல; நம் அமைப்புகள் தவறியதுதான் காரணம்” என்றார்.

அதேபோல, ஜெய்ராம் ரமேஷும், “இப்போது அமித் ஷா இவ்வாறு பேச வேண்டிய நேரமா இது? மிகுந்த உணர்வுஇல்லாத பார்வை இது” என வருத்தம் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ahmedabad plane crash Amit Shah BJP Congress


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->