மீண்டும் இன்று தொடங்கும் சட்டசபை.!
Again start assembly today
நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் இன்று சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது.
தமிழகத்தில் சட்ட சபையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீர்வளம், நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, நெடுஞ்சாலை, பொதுப்பணி வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், உணவு போன்ற துறைகளின் மீதான விவாதம் முடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 4 நாள் விடுமுறைக்கு பின் மீண்டும் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
English Summary
Again start assembly today