வழக்கறிஞரிடம் 96 லட்சம் பணமோசடி - அதிமுக முன்னாள் தலைவர் கைது.!! - Seithipunal
Seithipunal


தூத்​துக்​குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர் அரு​கே​ கோதூர் என்ற இடத்தில் சுமார் 7 ஏக்​கர் நிலம் வாங்​கு​வதற்​காக, கரூரைச் சேர்ந்த நிலத்​தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா​என்பவரிடம் முன்​பண​மாக ரூ.96 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க கால​தாமதம் செய்​த​தால், நில உரிமை​யாளர்​கள் அதனை வேறு ஒரு​வருக்கு விற்பனை செய்ததால் நிலத்தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா முன்பணமாக பெற்ற ரூ.96 லட்​சத்தை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம் திரும்​பக் கொடுத்​துள்​ளார்.

அதை வாங்க மறுத்த பிரின்​ஸ்​கிப்​ஸன், தனக்கு நிலம்​தான் வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​ உள்ளார். இதையறிந்த கரூர் ஊராட்சி ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வரும், அதி​முக விவசாய அணி மாவட்​டச் செய​லா​ள​ரு​மான பால​முரு​கன்​, இந்​தப் பிரச்​சினையை முடித்து தரு​வ​தாக ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் தெரி​வித்துள்ளார்.

அதனை உண்மை என்று நம்​பிய ஆர்​.எஸ்​.​ராஜா, கரூர் நீதி​மன்ற வழக்​கறிஞர் ரகு​நாதன் மூலம் ரூ.96 லட்​சத்தை கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் பால​முரு​க​னிடம் வழங்​கியுள்ளார். அதைப் பெற்​றுக்​கொண்ட பால​முரு​கன், அந்தத்​தொகையை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம் வழங்​காமல், தானே வைத்​துக்​கொண்​டுள்ளார்.

இதையறிந்த வழக்​கறிஞர் ரகு​நாதன், பால​முரு​க​னிடம் ரூ.96 லட்​சம் பணத்தை திருப்​பிக் கேட்ட​போது, அவர் தர மறுத்​ததுடன், கொலைமிரட்​டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரகுநாதன் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பெரோஸ்​கான் அப்துல்லாவிடம், புகார் அளித்​தார். இதையடுத்​து, மாவட்ட குற்​றப் பிரிவு போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று பால​முரு​கனை கைது செய்​து சிறை​யில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk karoor ex leader arrested for money fraud


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->