திருவள்ளூரில் பரபரப்பு.! தலையில் கல்லைப்போட்டு அதிமுக பிரமுகர் படுகொலை..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன்(57). அதிமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டு முன்பு உள்ள கடையில் தூங்கிய பஞ்சநாதன் இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பஞ்ச நாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த விசாரணையில் பஞ்சநாதனின் தலையில் கல்லை போட்டு மர்ம கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பஞ்சநாதனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk executive murder by stone on his head in tiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->