நெருங்கும் மக்களவைத் தேர்தல்: தொடங்கிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 

மாவட்ட செயலாளர்களை பொறுத்தவரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கிளை, பகுதி என அனைத்தையும் அனுசரித்து மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளை யாரும் உருவாக்க கூடாது என  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்குவார் என மாவட்ட செயலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நெருங்கும் நிலையில் பிற கட்சிகளில் இருந்து அதிமுகவிற்கும் அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டி முழுமையாக அமைக்கப்படவில்லை. அதற்கான காலகட்டங்கள் முடிவடைந்த நிலையில் அதனை முழுமையாக மேற்கொள்ள வேண்டும், அனைத்து பூத் கமிட்டி தொடர்பான விவரங்களை கொடுக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதனால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் இது தொடர்பான அறிக்கையை கொண்டு வந்துள்ளனர். அதனை இன்று நடைபெற உள்ள பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுக்க உள்ளனர். 

மக்களவைத் தேர்தலை பொறுத்து இன்னும் ஒரு மாத காலத்தில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலில் தேர்தல் வருவதால் குறைந்தபட்சமாக 40 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என அதிமுகவினர் பணிகளை மேற்கொள்கின்றனர். 

மேலும் எந்தெந்த தொகுதிகளில் யார், யாருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK District Secretaries Meeting Begins


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->