முகூர்த்த தின பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வசதி: தமிழ்நாடு பதிவுத்துறை அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழக பதிவுத்துறை, டிசம்பர் 5-ம் தேதியை சுபமுகூர்த்த தினமாகக் கருத்தில் கொண்டு, அதிகளவில் எதிர்பார்க்கப்படும் பத்திரப்பதிவுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

ஒரே நாளில் நிகழக்கூடிய பதிவுகளைச் சரியான முறையில் நிர்வகிக்க, இந்தத் துறை கூடுதல் முன்பதிவு டோக்கன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஒரு சார்-பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார்-பதிவாளர் அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், அதிகபட்சமாக பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 முக்கிய அலுவலகங்களுக்கு, கூடுதலாக தட்கல் முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்களுக்கு எளிமையான முறையில் மற்றும் சிக்கலின்றி பத்திரப்பதிவுகளை நிறைவேற்ற வசதி ஏற்படுமென தகவல் தெரிவித்தார். கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் கூடுதல் டோக்கன் வசதி பொதுமக்களிடத்தில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Additional Token Facility for Mukurtha Day Deed Registration Tamil Nadu Registry Notification


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->