தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய மன்சூர் அலிகான் - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.! - Seithipunal
Seithipunal


இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவராக இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அவர் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். அதாவது, வேலூர் மாவட்டம் லாங்கு பஜார் பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட்டில் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்தித்த மன்சூர் அலிகான், "இன்றைய மக்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனைப் பொது அஜெண்ட்வாக வைத்து வேலூரில் களம் காண்கின்றேன். பெரிய கட்சிகள் நிற்கின்றன. அவை பல்லாயிரம் கோடியைச் செலவழிப்பார்கள். மாற்றம் வேண்டும் என்பதற்காக எனக்கு மக்கள் உதவுவார்கள் என்ற பலத்தில் நிற்கிறேன். பொதுச் செயலாளருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பொதுச் செயலாளராகப் பாலமுருகன் என்பவர் உள்ளார்.

அதற்கு மேல் நான் ஏதும் கூற விரும்பவில்லை. கட்சியில் அவர் ஒரு மாதமாகத் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு நோக்கத்தோடு அவரை அனுப்பி உள்ளனர். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது அவருக்கு ஏதாவது கட்சியினர் பணம் கொடுத்து இது போல் பேசச் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள் போல. மற்ற கட்சியினர் அவருக்குப் பணம் கொடுத்திருந்தால் எனக்குச் சந்தோஷம்தான் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள், கதிர் ஆனந்த் மற்றும் ஏ.சி.எஸ் ஆகியோர் வேலூரில் பலம் பொருந்தியவர்கள் களம் காணுகின்றனர். இந்த தேர்தலை நீங்கள் பொதுமக்களிடம் எந்தவிதத்தில் கையாளுவீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், "பெரிய பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.

அவர்களை வீழ்த்த நான் எளிமையைக் கையாளப் போகிறேன் கண்டிப்பாக நான் வீழ்த்துவேன் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அவர்கள் லட்சம் லட்சமாக மக்களுக்குப் பணம் கொடுக்கலாம். அதனால் மக்கள் பயனடையலாம். அவர்கள் பிணவறையில் பணத்தை அடக்கி வைத்து விட்டு வருபவர்கள். அவர்கள் பெரியார் அண்ணா போன்ற தலைவர்களை முன்னிறுத்துகின்றனர் ஆனால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிய கோடீசுவரர்களாக உலகப் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.

நான் எளியவர்களுக்கான ஆட்சியை உருவாக்க வந்துள்ளேன் மக்களுக்கான உழைப்பாளியாக நான் இருப்பேன் நான் பாராளுமன்றத்தில் மக்களுக்காகப் போராட முடியும் அவர்கள் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். கண்டிப்பாக காட்டன் சூதாட்டம், மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பேன், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor mansoor alikhan press meet in vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->