கரும்புகையுடன் தொடங்கிய விபத்து…! - கணநேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த வேன் அதிர்ச்சி...!
accident that started black smoke Shocking moment when van burst flames
கேரள மாநிலத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், தங்களது வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சூரிய உதயத்தையும், விவேகானந்தர் பாறையின் அழகையும் ரசிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது, யாரும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த வேனில் இருந்து திடீரென கரும்புகை எழுந்து, கண நேரத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

மக்கள் நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் வாகனம் வேகமாக எரிவதை கண்டு, சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பதற்றத்தில் சத்தமிட்டு ஓடிச்சென்றனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அந்த வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக, தீ விபத்து நடந்த நேரத்தில் வேனுக்குள் ஓட்டுநர் உட்பட யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்த திடீர் தீ விபத்து, அங்கு இருந்தவர்களிடையே சில நிமிடங்கள் கடும் பதற்றத்தையும் பரபரப்பையும் உருவாக்கியது.
English Summary
accident that started black smoke Shocking moment when van burst flames