நீலகிரி மாவட்டம்! மின் பணியாளர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் மின் பணியாளர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பழுது ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மின்சப்ளை துண்டிக்கப்பட்டு பழுதை சீரமைக்கும் வேலையை மின் பணியாளர்கள் செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென்று மின்சப்ளை கொடுக்கப்பட்ட நிலையில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின் பணியாளர் ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் முழுவதும் கருகி விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு உடன் பணியாற்றியவர்கள் ஆனந்தராஜை சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனந்தராஜின் நிலைமை மோசமாக இருப்பதால் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident due to electric shock on electrical worker in Nilgiri district


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->