வேலூர் கோட்டைக்கு வந்துள்ள ''முதல் பிரதமர்''... - ஏ.சி.சண்முகம் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்து பிரசார கூட்டத்தில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 

பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் மேடைக்கு பிரதமர் வந்தவுடன் பா.ஜ.கவினர் கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்று வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பேசிய போது, 

வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி தான். உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் உதவுகிறார்.

இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான். 

இதனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AC Shanmugam says first PM visit Vellore


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->