தலைக்கேறிய மது போதை... தலையில் கல்லை போட்டு... நண்பனின் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சொந்த நண்பனின் தலையிலேயே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மதுரையின் பெரியார் பேருந்து நிலையம் அருகேவுள்ள திடீர் நகரில் வசித்து வருபவர் சதக் அப்துல்லா. ஆட்டோ ஓட்டுனரான இவர் சம்பவ தினத்தன்று பெரியார் பேருந்து நிலையம் அருகே நண்பர்களுடன் மது அருந்திருக்கிறார்.

அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இப்போது திடீரென நண்பர்கள் சதக்கத்துல்லாவின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை சதக்கத்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர் தப்பியோடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man was stoned to death at a drunken party in Madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->