குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் அன்னிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன்(38). இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜோதி முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் குடும்பத்தினருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தகராறு முற்றிய நிலையில், இதனால் மனவேதனை அடைந்த ஜோதிமுருகன், தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஜோதிமுருகனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி முருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமானூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man suicide in Ariyalur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->