10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய சிறுமியை 7 மாதமாக காதலித்து வந்துள்ளார். பின்பு சிறுமியிடம் பேசி பழகி வந்த ஞானசேகர் சம்பவத்தன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமையை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். 

இதையடுத்து அங்கு வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகர் அதனை வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். 

இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஞானசேகரை போக்க சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man arrested for took a video of raping a 10th class student in Villupuram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->