பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை: சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்!
A woman was made naked for an examination Sub inspector suspended
20 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகதுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதலான அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண்பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலை முடிந்ததும் தனது வீட்டிற்கு செல்லும்போது அவருடைய செல்போனுக்கு பேரூர் கடை போலீஸ் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது.அப்போது நீங்கள் வேலை பார்த்த வீட்டில் 5 பவுன் தங்க சங்கிலி திருடு போனதாகவும், நீங்கள் போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அப்பெண், விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்றபோது அங்கு மகளிர் போலீசார் அப்பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். திருடவில்லை, என்னை நம்புங்கள் என கூறியும் போலீசார் இரவு முழுவதும் விசாரணை நடத்தியதோடு சாப்பாடும் கொடுக்காமல்,குடிக்க தண்ணீர் கொடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் மறுநாள் காணாமல் போன தங்க சங்கிலி கிடைத்து விட்டதாக பேரூர் கடை போலீசாருக்கு புகார் கொடுத்தவர் கூறியுள்ளார். ஆனால் இந்த விவரத்தையும் அப்பெண்ணுக்கு தெரிவிக்காமல் மாறாக விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வர வேண்டும் என கூறி திட்டி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பெண்மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து முதல்-மந்திரிக்கும், டி.ஜி.பி.க்கும் புகார் அளித்தனர்.
மேலும் இந்த புகார் குறித்து திருவனந்தபுரம் சரக டி.ஐ.ஜி.விசாரணை நடத்தி,பேரூர் கடை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 20 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸ் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகதுணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதலான அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
A woman was made naked for an examination Sub inspector suspended