திருப்பத்தூர்: ஷூ கம்பெனியில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஷூ கம்பெனியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 7 மணியளவில் தொழிற்சாலையில் உள்ள குடோனில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயானது கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென குடோன் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது.

இந்த தொழிற்சாலையில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இதைக் கொண்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர்.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, சுமார் 12 மணி நேரத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் விலை உயர்ந்த வெளிநாட்டு ஷூ தயாரிக்கும் இயந்திரங்கள், ரசாயன பொருட்கள் உட்பட கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A terrible fire at a shoe company in Thirupattur


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->