மணல் கொட்டி வைப்பதில் தகராறு.. இளைஞரை காதை கடித்து துப்பியதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


வீட்டின் முன் மணல் கொட்டியதில் ஏற்பட்ட தகராற்றால் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பூனைகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் (28). இவர் வீட்டின் முன் புறம் மணல் கொட்டி வைத்திருந்தார். இதனால், அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த காந்தி ராஜனுக்கும், ஆனந்தனுக்கும் இடையில் தகராறு ஏடப்பட்டது.

இந்த தகராறு முற்றவே காந்திராஜன் ஆனந்தகுமாரின் வலது பக்க காதை துண்டாகக் கடித்து துப்பியுள்ளார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் கொட்டி வைத்திருந்ததால் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் காதை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person who bit his ear and spat in a dispute over soil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->