#திருநெல்வேலி || விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(29). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இசக்கிமுத்து சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.

இதனை அவரது மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த இசைக்கு முத்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து அப்பகுதியில் உள்ள சக்தி கோவில் அருகே மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு இசக்கிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person drinking poison in Tirunelveli


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->