திருமணமாகாத விரக்தியில் நியாயவிலை கடை ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. திருவாரூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமணமாகாத விரக்த்தியில்  ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மூங்கில்குடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நியாவிலைகடை ஊழியராக பணியாற்றி வந்தார். 45 வயதாகியும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவரது பெற்றோர் இறந்து விட்டதால் இவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தன்னை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்று நண்பர்களிடம் கிளம்பி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவரை கடந்த ஒரு வாரமாக காணாமல் அவரது நண்பர்கள் தேடி வந்துள்ளனர். அவரது வீடு பூட்டி இருந்ததால் அவர் வெளியூர் சென்று இருக்கலாம் என்று எண்ணி நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

 உடனடியாக இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செந்தில்குமார் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக ஒரு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man committed suicide Near Thiruvarur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->