நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைப்பு..  மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க 5 பேர் குழு அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள் தவிர்க்கவும் வெளி மாநிலத்தவர் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இறக்குவதை தடை செய்தும் விவசாயிகளிடமிருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் 6  தாலுகாவிலும் வருவாய் கோட்ட அலுவலர் அளவிலான அதிகாரிகள் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல " சட்ட ஆலோசகராக"(LEGAL ADVISOR)-ஆக பணியாற்ற இராணிப்பேட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அழைப்புவிடுத்துள்ளார்.


இதுகுறித்து இராணிப்பேட்டைமாவட்டகாவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா விடுத்துள்ள அறிக்கையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில்" சட்ட ஆலோசகராக"(LEGAL ADVISOR)-ஆக பணியாற்ற  இன்று முதல் 15நாட்களுக்குள் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்விருப்பமுள்ளமற்றும் தகுதி வாய்ந்த நபர்கள்விண்ணப்பிக்கலாம் எனவும் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A five-member committee has been formed to prevent irregularities in direct paddy procurement centers District Collectors order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->