8-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! மகளுக்கு நேர்ந்ததை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் எடுத்த விபரீத முடிவு...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்,சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.பின்பு கண்ணீருடன் தங்கள் மகளிடம் கர்பம் குறித்து கேட்டனர். ஆனால் சிறுமியால் தன்னை சீரழித்தவர்கள் குறித்த விவரங்களை சரியாக சொல்ல முடியவில்லை.

இதையடுத்து, தொடர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத தாய் தூக்கு போட்டு இருந்து விட்டார். சிறுமியின் தந்தை, மனைவி இறந்த சோகத்திலும் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 1-ந்தேதி அவர் புகாரளித்தார்.

அதன்பேரில் சிறுமியிடம் காவலர்கள் விசாரணை நடத்தி, சிறுமியுடன் நெருக்கமாக பழகிய சிலரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவு வந்த பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம், இரவு வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் தந்தை, மனைவி தற்கொலை செய்த அதே மின்விசிறியில் கயிற்றால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து தாய், தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8th grade student parents unable to bear what happened daughter took bizarre decision


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->