இலங்கையிலிருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.

இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில், 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதிக்கு இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் 8 அகதிகள் வருகை தந்து இருப்பதாக தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 8 அகதிகளை மீட்டு மண்டபம் தமிழக கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 srilankan refugees comes to tamilnadu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->