பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவி பலி.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


7ம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் நிதர்சனா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார்.  இந்நிலையில், வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கு சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை மேல் சிகிச்சைக்காக பல்லடம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7th Grade Student Death in


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->