அதிகாலையிலேயே சோகம் - திருப்பத்தூரில் சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி; 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே சோகம் - திருப்பத்தூரில் சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி; 7 பேர் படுகாயம்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு வேன்களில் சுற்றுலா சென்று விட்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றாம்பள்ளி அருகே சண்டியூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது திடீரென வேன் பழுதாகி நின்றுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் பழுதான காரை சாலையோரம் நிறுத்தி சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று பயங்கரமாக வேனின் பின்புறமாக மோதியது. 

இதில், வேன் சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 
7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த போலீசார் இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 peoples died and 7 peoples injured for accident in tirupathur


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->