இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் (60 வயது) என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது இளம்பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

60 year old man who intimidated a girl and made her pregnant


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->