பழிக்கு பழியாக நடந்த கொலை.. ஆறு பேர் கைது.. கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


அண்ணனை கொலை செய்தவர்களை கொன்ற தம்பி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் கண்னன். இவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில்  அவர் கடந்த 2020 ம் ஆண்டு காமராஜ் என்பவரை கொலை செய்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காமராஜின் தம்பி அண்ணனை கொன்றவர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு உடந்தையாக இருந்த ஐவரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 youths arrested in Murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->