6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் முக்கிய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் குறைந்துள்ளதால் உடற்கல்வி வகுப்புகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால் அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 to 9th std students announcement for education dept


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->