உங்க கடனை அடைங்க... தமிழக அரசு கொடுத்த ரூ.5000 பணத்தைத் திருப்பி அனுப்பிய தமிழன்!
5000 Surprise A Madurai Activists Return to dmk govt
தமிழக அரசு சமீபத்தில் 1.31 கோடி பெண்களுக்கு தலா ₹5,000 (3 மாத உரிமைத் தொகை + ₹2,000 கோடைகால ஊக்கத் தொகை) வழங்கி ஒரு மிகப்பெரிய "இன்ப அதிர்ச்சியை" கொடுத்தது. இந்தத் திடீர் வரவு மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சங்கரபாண்டியின் விசித்திர முடிவு:
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, தனது மனைவியின் கணக்கிற்கு வந்த ₹5,000 பணத்தை, அவர் சம்மதத்துடன் மீண்டும் மணி ஆர்டர் மூலம் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
ஏன் இந்தப் பணத்தைத் திருப்பி அனுப்பினார்?
இது குறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது: "கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு இது என் பங்களிப்பாக இருக்கட்டும்."
அரசு கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அந்த ரசீது மற்றும் கடிதத்தையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு அவர் எடுத்த இந்த "நேர்மாறான" முடிவு, இணையதளவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மக்கள் இந்தப் பணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றாலும், மறுபுறம் அரசின் கடன் நிலையைச் சுட்டிக்காட்டும் சங்கரபாண்டியின் செயல் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
English Summary
5000 Surprise A Madurai Activists Return to dmk govt