பழியை நாங்க சுமந்தோம்... திமுகவை நேரடியாகவே தாக்கிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!
congress mp attack dmk alliance may be break
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீறுபூத்த நெருப்பாக இருந்த அதிருப்தி இப்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. "நீங்கள் செய்த பல தவறுகளுக்காகப் பழியைச் சுமந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்; அதே வார்த்தைகளால் பேசுவோம்" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்துப் போராடி சஸ்பெண்ட் ஆனவர்களில் 7 பேர் காங்கிரஸார். "துணை நிற்கிறோம்" என்று வெறும் வாய்வார்த்தை பேசுபவர்கள் (திமுகவினர்) ஏன் தப்பிக்கிறார்கள் எனத் தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸை ஓரம் கட்டிவிட்டு, முதல்வர் அல்லது உள்துறை அமைச்சர் பதவியைத் தன்வசம் வைக்கத் திமுக ரகசியமாகச் செயல்படுவது காங்கிரஸிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களைச் செயல்படுத்திய 9 மாநிலங்களில் 5 மாநில அரசுகள் தோற்றுவிட்டன என்ற காங்கிரஸின் தரவுச் சவால், திமுகவின் வெற்றி நம்பிக்கையில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடித் தாக்குதல்: "சமரசம் செய்து கொண்டு வணக்கம் சொல்லும் பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையாது" என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டது, இனி கூட்டணியில் திமுகவின் தாளத்திற்கு காங்கிரஸ் ஆடாது என்பதையே தெளிவுபடுத்துகிறது. 2026 தேர்தலில் தவெக போன்ற புதிய சக்திகள் உருவாகும் நிலையில், இந்தக் கூட்டணி மோதல் திமுகவிற்குச் சவாலாக அமையலாம்.
English Summary
congress mp attack dmk alliance may be break