திருச்சி || பெங்களூரில் இருந்து காரில் குடத்திவரப்பட்ட 50 மூட்டை குட்கா பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து காரில் கடத்துவரப்பட்ட 50 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை சோதனைக்காக தடுத்தபோது கார் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்தனர். இதை பார்த்த அவர் காரை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிவேகமாக வருவதை பார்த்து அவர்கள், மன்னச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்ததில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 மூட்டை குட்கா இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து குக்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 bundles of gutka smuggled from Bangalore seized in Trichy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->