மருத்துவம் படிக்காமல் சிகிச்சை.. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போலி மருத்துவர்கள் கைது.!
5 fake Doctors arrested in thirupathur today
நாடு முழுவதும் ஒரு சிலர் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக தவறான சிகிச்சையினால் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போலி மருத்துவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் மற்றும் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த 5 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் ஜோலார்பேட்டை, ஆலங்காயம், அம்பலூர், குரிசாலப்பட்டு, நாட்றம் பள்ளி பகுதிகளில் இருந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட அனைவரும் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
English Summary
5 fake Doctors arrested in thirupathur today