அடி தூள்.. பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிச்சாச்சு.. குஷியில் மாணவர்கள்.!!
4th to 8th class school holiday announced in tamilnadu
தமிழ்நாட்டில் 4 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் தேர்வு எழுத மற்றும் பள்ளிகளுக்கு வரலாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
4th to 8th class school holiday announced in tamilnadu