கரூரில் பரபரப்பு.! பட்டியலின மாணவரை வீடு புகுந்து தாக்கிய 4 மாணவர்கள் கைது.!!
4 students were arrested for attack on dalit student
கரூர் மாவட்டம் உக்கடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது பாட்டி கன்னியம்மாள் வீட்டில் தங்கி படித்து வரும் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்த போது புலியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கும் பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் இடையே பேருந்தில் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இந்த நிலையில் அடுத்த நாள் அந்த மாணவனின் ஊருக்குள் சென்ற கும்பல் பட்டியலின மாணவன் மற்றும் அவரது பாட்டி கன்னியம்மாளை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பட்டியலின மாணவன் மற்றும் அவருடைய பாட்டி கன்னியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவன் தரப்பில் அளிக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளங்கோ, மணிகண்டன் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் இரண்டு பள்ளி மாணவர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 students were arrested for attack on dalit student