சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்.!
4 arrested in ssi murder case
புதுக்கோட்டை அருகே ஆடுகளை திருடி சென்ற நபர்களை பிடிக்க முயன்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி அளவில் ஆடுகளை திருடிச் சென்றவர்களை துரத்தி பிடித்தபோது, சிறப்பு காவல் ஆய்வாளரை திருட்டு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஆடு திருடிய இரண்டு நபர்களை அவர் பிடித்து விசாரணை செய்துள்ளார். அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அவர்களை பூமிநாதன் மற்றும் சித்திரவேல் என்ற காவலரும் துரத்தி சென்று உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பள்ளப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே அந்த இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்த சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். திருடர்களை நான் பிடித்து வைத்துள்ளேன். நீங்கள் உடனே வாருங்கள் என்று தகவல் கொடுத்துள்ளார். ஆனால், திருடர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பூமிநாதனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருடர்களை விரட்டிச் சென்ற நவல்பட்டு சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை சுற்றி வளைத்து தனிப்படை காவல்துறையினர் பிடித்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள், மற்றும் 19 வயது உடைய இளைஞர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
English Summary
4 arrested in ssi murder case